கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

வீடுபேற்றின் வாயிலை நாடு!




















நிலத்தோடு ஸ்பரிசிக்கும் கால்கள்
நெஞ்சுக்குள் ஈரம் எப்போதும் பிரவாகமாய் !
பிராணத்தின் சூட்சுமத்தை அறிந்த இதயம்
தணலாய் எப்போதும் அடிவயிற்றின் யாகம்
கண்மணிக்குள் அடங்கிவிடும் நீலவானம்
ஐம்பூதங்களை ஒருங்கிணைத்து
சும்மா இருத்தலின் சுகம்தானைக் காண
அம்மா என்று உச்சரித்து அமர்ந்தேன்!
அமர்ந்தநிலை தியானத்தின் உச்சத்தில்
ஒரு எல்லையற்ற நிர்மலமான
அகண்டவெளியின் ஓங்காரத்தின்
ஒளியழகைக் கண்டேன்!
உருவமும் அருவமும் இல்லா
நிலை எய்தும் உன்னதம்
சும்மா இருத்தலின் சுகம்தானில்
மண்டிக் கிடக்கிறது மனமே!
அலைபாயும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்து!
சிலையென அசையாது
சின்முத்திரைப் பதித்து
அன்பின் வழியது உயிர்நிலையென
அறப்பொருளாய்
வீடுபேற்றின் வாயிலை நாடு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.