கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 30, 2015

இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !

எளிமையின் சிகரம்
இணையிலா மாமனிதர்
கவிதை நெஞ்சின் கோமகன்
அக்கினிச் சிறகினில்
அகிலத்தை அடைகாத்தவன் ...
பார் போற்றும் பாரதரத்னா !
இராமேஸ்வர கடற்கரையின்
இளம் தென்றல்....
அன்பெனும் சிறைக்குள்
நம்மை அகப்படவைத்தவன் !
அறிவியல் உலகின்
ஓர் அமர காவியம்....
தமிழுலகின் இலக்கியப் பேழை
இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !
மதங்களைக் கடந்த மாமேதை
அப்துல் கலாம் இன்னுயிர் பிரிந்தாலும்
அவரின் சாதனைப் பயணம்
என்றும் நம்மோடுதான். !

...............கா.ந.கல்யாணசுந்தரம்.
 

சனி, ஆகஸ்ட் 09, 2014

நீங்களாவது.......




கொடிதருகிறேன் 
குண்டூசி தருகிறேன் 
நீங்களாவது சட்டையில் 
அணிந்துகொள்ளுங்கள்!
என்று தணியுமிந்த 
ஏழ்மையின் தாகம்?
தேசியம் தழைத்ததா?
சுதந்திரம் பிழைத்ததா?
நினைவினில் பாரதி ....
நிழலாடுதே உன்கவி...!

........கா.ந.கல்யாணசுந்தரம் .

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

வெற்றிக்கான விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

சிறகை விரி! வானில் எழு!!




எப்போதும் நல்லதை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின்
வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று
செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது
முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில்
வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை
காணும் நேரம்
அருகாமையில்தான்
என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம்
என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை
அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின்
புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....
சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும்
பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின்
விளிம்புகளையாவது
தரிசனம் செய்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.






திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பார்வையின் எல்லைக்குள்..........

நம் கைகளுக்கு
எட்டாத தூரத்தில்
வைத்திருப்போம்
குறிக்கோள்களை
ஆனால் அவை
எப்போதும்
இருக்க வேண்டும்
நமது
பார்வையின்
எல்லைக்குள்!
அவற்றை திருத்தவும்
அடையவும்
நம்மிடம் அதிகாரம்
இருக்கிறது!

......கா.ந .கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கனவுத் தொழிற்சாலைகள்

கனவுத் தொழிற்சாலைகள்
மனிதத்தின் முதலீடுகள்
எல்லையற்ற ஆசையின்
ஆளுமையில் அவைகள்
ஒரு போருக்கான
கருவிகளின்
உற்பத்திக் கூடங்களாகின்றன....
இனியாவது
கவனத்துடன் இருப்போம்
மற்றவர்கள்
நம்
கனவுகளையாவது
விட்டு வைக்கட்டும்
களவாடாமல்!