கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, மார்ச் 04, 2012

இனிய ஹைக்கூ ஒரு மொழிபெயர்ப்பில்.....


அன்பார்ந்த வலைத்தள உறவுகளே, எமது மனிதநேயத்துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூலில் இருந்து
சில முக்கிய ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் http://www.wonderhaikuworlds.com/ வலைத்தளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
தங்களின் சிறப்புப் பார்வைக்கு.


*வைகறையில் சூரியனை
பங்குபோட்டன....
தென்னங் கீற்றுகள்!

*ഉദയ സൂര്യന്
തുണ്ടം തുണ്ടമായി -
ഓലക്കീറുകള്
.....................


*பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
எண்ணிலா இலக்கை நோக்கி.


*പായ്മര കപ്പലില്
യാത്രയില്
മഹത്തായ ദിക്ക് നോക്കി
....................


*வீட்டின் கூரையில்
புதுமனை புகுவிழா...
சிட்டுக்குருவிகள்

*വീടിന്റെ കൂരയില്
ഒരു പാലു കാച്ച്
ചെറു കുരുവികള്


....................

*பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்....
ஒருமைப் பாட்டுணர்வுடன்!


*പല വര്ണ മലര്കള്
ഒരു നാരില് നിന്ന്..
ഒരുമയിന് ഉണര്വുമായി
....................

சில்லரை காசுகள்தான்
இன்னிசைப்பாடல்கள்
தெருப்பாடகன்.

*ചില്ലറ കാശുകള് തന്നെ
എന്റെ മധുര ഗാനങ്ങള്
തെരുവ് ഗായകന്
...................
*இல்லையென்று சொல்லாமல்
ஒருமாலரினை கொடு
நெஞ்சம்நிறையும்

*ഇല്ലെന്ന് ചൊല്ലാമല്
ഒരു പൂവെങ്കിലും കൊടുക്കു ~
മനം-നിറയെ ആനന്ദം
...................
*மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்

*മുങ്ങി പോയെങ്കിലും
മലര്ന്നു ജല വൃത്തങ്ങളായി ...
കുളത്തില് എറിഞ്ഞ കല്ല്

.....................

*உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்

*കയ്ക്കുന്ന ബന്ധങ്ങളും
മധുരിക്കുന്ന ചക്ക ചുളകളായി
വേര്പാടിന്റെ നിഴലുകളില്
.............

.........கா.ந.கல்யாணசுந்தரம்.