கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 31, 2011

வாழை பூக்கட்டும்!





அர்த்தம் புரியாத நாட்களில்
நெருகிப் பழகினோம்
ஒரு புரிதல் தொடங்கியபோது - நான்
ஒரு ஒற்றைச் செம்பருத்தியாய்p
மதிலுக்குள் ஒளிக்கப்பட்டேன்!
வாசம் மிகுந்தாலும் எனக்குப் பிடிக்காத
ஜாதி மல்லிகை பதியம் போட்டனர்!
செந்தூரப் பூக்களின் வாசமாக - உனது
நினைவலைகள் எனது இதயக்கமலத்து
தடாகத்தில் வந்து செல்கின்றன!- நமது
காதல் ரோஜா இதழினும் மென்மையானது!
எனினும் முட்கள் உடனிருப்பதால்
உங்களின் கரங்களுக்கு கவனம் தேவை!
தேனருந்தும் கருவண்டின்
கள்ளத்தனம் வேண்டாம்!
கார்காலம் வருமுன்னே வாருங்கள்!
கதிர்முற்றி சாயுமுன்னே வாருங்கள்!
புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
உங்களின் பரிசத்தால் பரிச்சயமாகட்டும்!
ஊர்கூடி வாழ்த்துப்பா ஒலிக்க - நம்
வீட்டு வாயிலில் வாழை பூக்கட்டும்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்..