![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwcMEK6C-Zva5qJCVQwmgepXA0Fi_-Q1L1K9hCrVF8JGQo1yeo3A1JeHXXlD4YoAFmckHa10ZJ8ZlBA722U4OkK9p9f6-kpb-yGZkqpS9c6NXf_moeL9AKtkl1Rj72NbXhj57n-nJaiaoL/s320/evening+scene.jpg)
மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!
.........கா.ந.கல்யாணசுந்தரம்.