கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
ஹைக்கூ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைக்கூ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 16, 2017

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

1999 ல் இருமொழிகளில் (தமிழ்-ஆங்கிலம் ) வெளியான எனது " மனிதநேயத் துளிகள் " ஹைக்கூ கவிதைகள் இப்போது நம்மொழிப் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக (தமிழ் மட்டும் ) சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்: 
9443259288
புத்தக விலை ரூ. 80/-
(அஞ்சல் வழி பெற ரூ. 100/-)
வங்கிக் கணக்கு:
KALYANASUNDARAM N
UNION BANK OF INDIA
VELACHERY BRANCH
A/C NO: 579002030000004
IFSC UBIN0557901

புதன், டிசம்பர் 21, 2016

மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

" மனசெல்லாம் " ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட " எழுத்துச் சிற்பி " விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

புதன், ஏப்ரல் 13, 2016

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.


தமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்முக கருத்துக்களோடு வெளிவர உள்ளது " காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.

தற்கால ஹைக்கூ கவிஞர்கள் விரைந்து தங்களது ஹைக்கூ நூல்களை கீழ்கண்ட எனது முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

அன்பன்,

கா.ந.கல்யாணசுந்தரம்
நெ.62 பத்தாவது தெரு
ஜெயச்சந்திரன் நகர்
மேடவாக்கம்
சென்னை 600100

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....

ஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும்.
பாஷோ (ஹைகூவின் தந்தை)
போசோ பூசான்
கோபயாஷி இன்ஸா
மாஸஒகாகிஷிஇந்த 
காவா ஷி காஹி ஹெகி கோட்டோ
தகாஹடா கியோஷி
ஒகிவார செயசென்சூய
தனேடா சந்தோகா
ஒசதிஹோ சாய்
நாகத்சூகா இப்பெகரோ
ஹாஷிமோடோதகாகோ
நாகமுரா குஸதாஒ
கேடோ ஷூசென்
ஒசாகி ஹொசாய்
இஷிகாவா தாகுபோடு
காரய் சென்றியு

மேற்கண்ட ஜப்பானிய ஜென் தத்துவ ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் நமது கவிஞர் சுஜாதா அவர்களின் ஆய்வேட்டில் தமிழாக்கம் செய்துள்ளபடி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறேன். இவர்களுடன் உங்களது கவிதைகளும் மேலான ஆய்வுகளுடன்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஜனவரி 03, 2015

படிகட்டுகள் இல்லாத மலை...

படிகட்டுகள் இல்லாத மலை
மனிதன் ஏற முடியவில்லை...
மரங்கள் தழைத்திருக்கின்றன !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

கார்கால ஹைக்கூ கவிதைகள்.....




*கார்கால மழை
நனையாமல் நகரும் நத்தைகள்
சாலையோர நாய்க்குடை காளான்கள் ...!

* பாசிபடிந்த ஆல விழுதுகள்
ஊஞ்சலாடுகின்றன...
மழையில் நனைந்த மந்திகள் !

* மந்தையில் இருந்து பிரிந்தது
ஆட்டுக்குட்டி....
மஞ்சள் வெயிலில் நனைந்தபடி !

* குளிர் காற்றில் ஊசலாடும்
தூக்கனான் குருவிக் கூடுகள்...
உறக்கமிழந்த குஞ்சுகளோடு !

* புது வெள்ளத்தில்
ஆனந்தக் கூத்தாடியது...
ஓடைக்கரை தவளைகள்  !

* நேற்று பெய்த மழை வாசம்
புத்துயிர் பெற்றன...
எனது கவிதைக் கரங்கள் !

* இன்னமும் தேடுகிறது மனது
மழை வருமுன் மணக்கின்ற
மண்வாசம் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


செவ்வாய், மார்ச் 25, 2014

ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !



@  பூட்டிய வீட்டுக்குள்
      சலங்கை ஒலி ...
      பரதம் கற்பித்த முற்றத்துடன் !

@  நிலவொளியில் மங்கினாலும்
      நீலவானின் நண்பர்கள் ...
      விண்மீன்கள் !

@  நடைபயிலும் குழந்தைக்கு
      தெளிவாய் தெரிந்தது
      நம்பிக்கையின் இருப்பிடம் !

...........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஏப்ரல் 11, 2012

வேர்களின் தேடல்.....













பூக்களுடன் உறவாடும்

வண்டுகளுக்கு தெரியுமா?

வேர்களின் தேடலை ....!


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

எங்கள் வீட்டு தோட்டத்தில்....

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!