கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூன் 22, 2016

புதுயுகம் கண்டிட உடனிருப்போம்

இயல்பாய் படித்திடு என் மகனே !
******************************************************
மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்
மாநில விருதுகள் பெறவேண்டும்
ஊடக செய்தியில் வரவேண்டும்
உறவுகள் வியப்பில் விழவேண்டும்
இதையே இலக்காய் வாழாமல்
இயல்பாய் படித்திடு என்மகனே
......(மதிப்பெண்)
நாட்டு நடப்பில் பங்கேற்று
நடைமுறை வாழ்வில் விளக்கேற்று
அனிச்சை செயலாய் வாழாமல்
அறிவுப்பூர்வமாய் நடைபோடு
.....(மதிப்பெண்)
உன்னில் இருக்கும் திறனறிவாய்
உலகம் வியக்க வளர்த்திடுவாய்
கன்னல் தமிழை நன்கறிந்து
கவிநூறு கலைகள் காத்திடுவாய்
....(மதிப்பெண்)
வித்தக வாழ்க்கையின் வளமனைத்தும்
புத்தக சுமைக்குள் கிடைக்காது
பெற்றோர் நாங்கள் உணர்ந்துவிட்டோம்
புதுயுகம் கண்டிட உடனிருப்போம்
....(மதிப்பெண்)
..........கா.ந.கல்யாணசுந்தரம்