கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
செம்மொழி தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 20, 2016

இனி கங்கைக்கரையில்தான் என்று !


அறம் பொருள் இன்பமென
முப்பாலைப் பொழிந்தாய் !
மானுடம் உய்ய உலகுக்கோர்
பொதுமறையை பகன்றிட்டாய் !
செம்மொழியாம் தமிழுக்கு
மகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !

தன்னலம் கருதா தமிழ்க்காதலன்
தருண்விசையின் முயற்சியில்
கங்கை நதிப்புறத்து நற்றமிழ்
ஆசானாய் நீ கொலுவிருக்கும்
தருணத்தில்......பாவிகள் உன்னை
புறக்கணித்து கருப்புநிற காகிதத்தில்
சுற்றியபடி பூங்காவில் தள்ளினரே !
இன்னா செய்தாரை அவர்நாண
நன்னயம் செய்பவன் நீ......
பொருந்தாது இவையெல்லாம்
இந்நாளில்.....
தமிழினம் கொதித்தெழும்...!
இந்திய தேசியத்தின் நூலென
திருக்குறளை அரசு ஏற்காவிடினும்
சூளுரைப்போம்.....நம் அய்யனின்
திருவுருவம்.....இனி கங்கைக்கரையில்தான் என்று !


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 15, 2015

விதைக்கப்பட்ட சுதந்திரம் ......















இந்தியத் திருநாட்டில்
விதைக்கப்பட்ட சுதந்திரம்
ஆல்போல் தழைத்து
தன்னிறைவின் நிழல் பரப்பி
தரணியிலே தலைநிமிர்ந்து
நிற்கிறது !
வல்லரசு கொடியுயர்த்தும்
நாள் தொலைவிலில்லை !
மென்பொருள் அறிஞர்கள்
கூகுள் இணையத்திலும்
கோலோச்சி நிற்கிறார்கள் !
அறிவியல் வேளாண்
துறைகளிலும் அளப்பரிய சாதனை !
ஏவுகணை வரலாற்றில்
இணையிலா முத்திரைப்பதித்தார்
இந்தியக் குடிமகன்
அப்துல் கலாம் !
எண்ணற்ற எல்லையோர
இராணுவ வீரர்கள், கலைஞர்கள் ,
பல்துறை அறிஞர்கள்,
திறன்மிகு அரசியலார், 
வல்லுனர்களை ஈந்து
பெரிதுவக்கும் இந்தியத்தாயின்
இன்றைய வேண்டுகோள்.....
“மதுவற்ற மாநிலங்களைத்
தழுவட்டும் இனி பாரதம் !
தனிமனிதன் ஒழுக்கநெறி
பேணி தியாகி சசிபெருமாள்
கனவுதனை நினைவாக்குங்கள்”
வந்தேமாதரம் ...!!! ஜெய்ஹிந்த்......!!!!!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், ஏப்ரல் 14, 2014

தமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு!










முத்தமிழின் சுவையுணரும் 
இளங்காலை நேரம் !

இத்தரையை மகிழ்விக்கும் 
சுகமான காலம் !
சித்திரை எனும் 
முத்திரை பதித்த மாதம்!
மல்லிகை மலரோடு 
மாவிலைத் தோரணம் அசைந்தாட 
மெல்லிசையாய்  
தமிழ் பேசும் மழலை மொழி !
உற்றோரும் பெற்றோரும் 
பெற்றெடுத்த தமிழ்மண்ணின் 
வரலாற்றை வளமோடு காத்திட்டு 
வளர்கின்ற தலைமுறைக்கு
தாய்மொழியை அமுதாக..... 
என்றென்றும் தந்திடுவோம்  தரமாக !
ஜெய ஆண்டின் வருகையிலே 
இதய மகிழ் தமிழ் வாழ்த்து 
இயம்புகிறேன் .... தமிழ் நவின்று 
தழைத்திடுங்கள்  பல்லாண்டு! 

........... கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நெஞ்சம் நிறையும்



இல்லையென்று  சொல்லாமல் 
ஒரு மலரினைக் கொடு 
நெஞ்சம் நிறையும் 
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)