கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

எதிர்பார்ப்பும் கூடத்தான்!

இயற்கையின் யதார்த்தங்களில் இருந்து
விடுபட்டுப்போன காட்சிகள்!
இனிய இராகங்களின் புரிதல் இல்லாத
பாடல்களின் அரவணைப்புகளில்
விரசமான உடை அணிவிப்புகள்!
மனதைத் தொடாத குத்துப்பாடல்கள்!
நாமென்ன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமா
கேட்கின்றோம்?
வன்முறையும் விரசமும் வாடிக்கையாகிப்போன
இந்த சினிமா ஊடகம்
இளையதளைமுறைத் தோட்டத்து
நச்சு களைகளாக அல்லவா இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் எனும்
வாழ்வியல் தத்துவங்கள்
நவீனத்துவமாக இந்த
சினிமா ஊடகங்களில்
ஏன் உலா வரக்கூடாது?
இது இன்றைய இளைஞ்சர்களின்
வினாவல்ல!
எதிர்பார்ப்பும் கூடத்தான்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.