![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8UHdqr3As58NuKO31C8uZH_mkDQykwHtwc1kIaEZE7jqQHNCE2GTsH9GfdcsPRYWzE-abg14SmMu4CswjaYdMqSXyamsN2eAfvblp07JODqiPpM189oyv5rOrRXziE3zANk7H1zOk7EVI/s320/independence+flage.jpg)
அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!
.....கா.ந..கல்யாணசுந்தரம்