![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBDKxiUHUnxeQXUd1lvju2GlQTmh9MQYQkkrLFrFpKLNBohyphenhyphenpUuyD-Sr2FJMPGeyY67zNzT6NVv2YDO0AHC1B7PWb8q0JYHEPfonEMT-vCj5OznWBALjdYIdQcQYLV2xPyOGdTUaKAS5jX/s320/rose.jpg)
@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !
@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !
@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !
@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!
@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !
@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !
@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!
.............கா.ந.கல்யாணசுந்தரம்