கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், மே 21, 2012

ஹைக்கூ ... தத்துவ மலர்கள்




@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !

@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !

@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!

@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !

@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !

@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், மே 02, 2012

முன்னோக்கிய பயணிப்பில்....






இயற்கையும் செயற்கையும்

பின்னோக்கி நகர்கிறது ...

நமது முன்னேறும் பயணிப்பில்!



........கா.ந.கல்யாணசுந்தரம்.