இயற்கை ஒரு
திறந்த புத்தகம்
அதில் மனிதநேயமே
முகவுரை
புல்வெளிகளும்
மண்டிக்கிடக்கும்
மலர்களின் வாசமும்
பக்க எண்கள்
மகரந்தம் பரப்பும்
வண்ணத்துப்பூச்சிகளும்
வண்டினங்களும்
அத்தியாயங்கள்
அந்திவானமும்
மேகம் தழுவும் மலைகளும்
நதிக்கரை நாணல்களும்
நயமிக்க வார்த்தைகள்
அடர்வன மூங்கில் புதர்களும்
நெஞ்சை அள்ளும்
நீரோடைகளும்
புனைவுகளின் பிரதிகள்
கீதம் பாடும் விடியல்
பறவைகளும்
புல்லின் நுனி பனித்துளிகளும்
முடிவுரையின் எல்லைகள்
இன்னும் பல ......
இயற்கைப் புத்தகத்தின்
உதிர்ந்த இறகுகளாய்
வானத்தை அளந்தபடி
தென்றலில் கரைந்தன
ஆம் ......கோடரியில்லா
மானுட கரங்கள் இனி
பூவாளிகளை மட்டுமே
தயாரிக்கும்....!
......கா.ந.கல்யாணசுந்தரம்.