கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, அக்டோபர் 15, 2011

ஒரு கார்கால துவக்கம்.....

என் ரோஜா தோட்டத்தில்
எனக்காக முதலில் பூத்த மலராக
உனது வருகை எப்போதுமே இருக்கும்.
வார மாத இதழ்களில் வருகின்ற
கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதில் உனது பார்வையின் துடிப்பை
அறிந்துகொண்டிருக்கின்றேன்!
காதல் உணர்வுகளில் எனது இதயம்
ஒரு தும்பியாய்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது!

பெண்ணியம் சார்ந்த ஒரு புரிதலில்
நிச்சயமாக இது சிற்றின்பம் இல்லை.
கனவுத் தொழிற்சாலையின்
இன்ப உற்பத்தியாக இருந்தால்
இந்த சமுதாய சந்தையில்
நம்மிடம் இருந்து காதல்
களவாடப்படும் என்பது உறுதி !

நாம் கை கோர்த்து நடந்த
நாள் முதலே நட்பின்
இலக்கணத்தை அல்லவா
சுவாசித்திருக்கிறோம்.
அது நம் காதலின்
கார்கால துவக்கமென்றால்
இன்று நமதுள்ளம்
இளமையின் வாயிலில்
உன்னதமான சிநேகத்தின்
வசந்தமாகட்டும்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.