கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், மே 03, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3
******************************************************
* போரில் தோற்று சங்கிலியால்
பிணைத்து சிறைப்படுத்தப்பட்டான்
செங்கணான் நாட்டில் சேரமான்
* யாசித்து பருகும் நீர்வேண்டேன்
தன்மானத்தோடு இறந்தான் சிறையில் ...
சேரமான் கணைக்கால் இரும்பொறை !
* இறந்து பிறந்த குழந்தையோ
 தசைப் பிண்டமோ புதைக்கப்படும்
வீரமிகு வாளால் கீறி !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
(புறநானூறு-74)
பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2
****************************************************
புலிபோகிய கல்குகையே தன்வயிறு
பெருமை நவிலும் வீரத்தாய்...
போர்க்களம் தோன்றும் வீரமகன் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்
(புறநானூறு: 86)
(சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே !
.............காவற்பெண்டு )

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1



அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1
*******************************************************

முரசுகட்டிலில் புலவன் மோசி கீரனார்
கவரிகொண்டு வீசினான்.....
மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

" மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம்
 மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
 அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
 விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?"

(புறநானூறு - 50) .......மோசி கீரனார்