கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஜூன் 02, 2016

இசையுலகின் இணையிலா மேதை !

இசையுலகின் இணையிலா மேதை !

இறைவனின் இசை அவதாரம் !


இயற்கையின் இதயத்தை தொட்டவன் !


இயல்பின் வெளிப்பாடுகளில்


இமயத்தை முத்தமிட்டவன் !


இலங்கும் புவிமீது இசையின்


இலக்கணத்தை வடித்தவன் !


இன்றல்ல நேற்றல்ல என்றும்


இசையுலகின் சக்கரவர்த்தி !


இளையராஜா- எங்களின்


இதயம்கவர் கள்வன் !


இந்தியத்தாய் பெற்றெடுத்த


இணையிலா தவப்புதல்வன்


இன்னும் இன்னும் வேண்டும்


இவனின் இசை கேட்டு


இன்பம் பருகும் வாழ்நாட்கள் !


இந்த இன்னிசை வேந்தனின்


இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்


இதயம் கனிந்து !




............கா.ந.கல்யாணசுந்தரம்.