காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!
.........கா.ந.கல்யாணசுந்தரம்.