கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், பிப்ரவரி 18, 2026

நூலகம் என்றோர் இடமுண்டு



நூலகம் என்றோர் இடமுண்டு
நல்லோர் நூல்கள் பலவுண்டு
படித்தால் வாழ்வில் பலனுண்டு
பார்வைக்கும் சிறந்த நலனுண்டு
புரட்டிப் பார்க்க வரவேண்டாம்
படித்துப் பார்க்க வருவோமே
பேசி இடையூரைத் தரவேண்டாம்
வாசிப்பை நேசிக்க வருவோமே
கதைகள் கவிதைகள் கட்டுரைகள்
விதையாய் மனத்தில் ஊன்றிடுவோம்
வார்த்தைச் சுரங்கம் அகழ்ந்தாய்ந்து
பேசிடும் போதில் விருந்தளிப்போம்
பண்புடையாளர் தொடர்பினைப்போல்
புத்தகம் வாசித்தல் தந்திடுமே
நற்பல நூல்கள் அணியணியாய்
நம்முடன் இணைந்தே வந்திடுமே
---கா . ந . கல்யாணசுந்தரம்