கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், அக்டோபர் 28, 2019

சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....


சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....

1. பெற்றோர்கள் தமது குழந்தைகள் வளர்ப்பில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியப்போக்கு உயிருக்கே ஆபத்து என்பதை உணர்த்துகிறது.

2. குறிப்பாக பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்க / எதிர்கொள்ள நம்மிடம் விழிப்புணர்வு இல்லை. மேலும் வருமுன் காத்தல் என்ற புரிதல் இல்லாமை.

3. அரசு திட்டமிடலில் தேவையற்ற திட்டங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. மனித உயிர் காத்தலுக்கு திட்டமிடலும் நிதி ஒதுக்கீடும் மிக மிக குறைவு.

4. துறைசார்ந்த பணியாளர்கள் தங்களது பணிகளை நேரத்தோடு செயல்படாததால் விதிமீறல்கள் எளிதாக தலைதூக்கி அவலங்கள் நடைபெறுகிறது

மக்கள் கண்மூடித்தனமாக அரசு அதிகாரிகளை இழிவு படுத்துவது தவறு. குழந்தை சுர்ஜித்தை மீட்க அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகள் எதிர்பார்த்தலுக்கு மேலாகத்தான் இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களையும் குறை சொல்வதை தவிர்த்துப் பாராட்டுங்கள். மக்களுக்கு இதனால் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுகின்றது.

விமர்சனக் கோணங்கள் பல்வேறு வகைதான் இருக்கும். எனினும் இயற்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்வது என்பது சாதாரணமல்ல.

இடத்தின் சூழல் குழந்தையை மீட்டெடுக்க தாமதம் ஆகிறது என்பது கண்கூடு. கடினப் பாறை அதிநவீன எந்திரத்தாலும் தகர்ப்பது கடினமாக இருப்பது அரசு எதிர்கொள்ளும் சவால்.

இம்மாதிரி நேரங்களில் வீணான விமர்சனங்களை தவிருங்கள். எவரையும் திணறடிக்கும் / மகிழவைக்கும் திறன் இயற்கை சார்ந்த சூழலுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

முயற்சி வெற்றியடையட்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம்