கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 05, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5 **************************************************

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5
************************************************************
• மூவேந்தர் சூழ்ச்சியில் மாண்டான்
 பறம்புமலை வேந்தன் 
வள்ளல் பாரி மன்னன்
• அந்த நிலாக்காலத்தில்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்

• இந்த நிலாக்கால வெண்ணொளியில்
இழந்து வாடுகிறோம்
 எங்களது குன்றுடன் தந்தையையும்
• கபிலரின் அரவணைப்பில்
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
• கபிலரை இழந்த பாரிமகளிருக்கு
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
 ஔவை மூதாட்டி
..........கா.ந.கல்யாணசுந்தரம்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறநானூறு – 112) .......... பாரி மகளிர் அங்கவை சங்கவை

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4
************************************************************
பிறப்புநிலை காணாது நற்கல்வி கற்றோர் சிறப்படைவர்... 
அன்னை முதல் அரசன் வரை !
.......கா.ந.கல்யாணசுந்தரம்
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.
(புறநானூறு - 183...........
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)


புதன், மே 03, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3
******************************************************
* போரில் தோற்று சங்கிலியால்
பிணைத்து சிறைப்படுத்தப்பட்டான்
செங்கணான் நாட்டில் சேரமான்
* யாசித்து பருகும் நீர்வேண்டேன்
தன்மானத்தோடு இறந்தான் சிறையில் ...
சேரமான் கணைக்கால் இரும்பொறை !
* இறந்து பிறந்த குழந்தையோ
 தசைப் பிண்டமோ புதைக்கப்படும்
வீரமிகு வாளால் கீறி !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
(புறநானூறு-74)
பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2
****************************************************
புலிபோகிய கல்குகையே தன்வயிறு
பெருமை நவிலும் வீரத்தாய்...
போர்க்களம் தோன்றும் வீரமகன் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்
(புறநானூறு: 86)
(சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே !
.............காவற்பெண்டு )

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1



அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1
*******************************************************

முரசுகட்டிலில் புலவன் மோசி கீரனார்
கவரிகொண்டு வீசினான்.....
மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

" மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம்
 மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
 அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
 விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?"

(புறநானூறு - 50) .......மோசி கீரனார்