கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

1 கருத்து: