கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், நவம்பர் 05, 2012

உயிர்ப்பின் ஆசை


பார்த்த பொம்மைகளையே
மீண்டும் மீண்டும் பார்த்தவாறே
அலுத்துப்போன குழந்தை
தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!
சிதறிக்கிடந்த பொம்மைகள்
மீண்டும் உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!
தாத்தாவும் பொம்மைகளோடு
பொம்மையாய் குழந்தையை
சுமந்தவாறே தூங்கிப்போனார் !
எங்கிருந்தோ பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும் குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து படுக்கவேண்டும்'

........கா.ந.கல்யாணசுந்தரம்