வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும் 
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !
கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து 
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க 
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி 
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !
இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள் 
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே 
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால்  
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக
நின்றிடுவாள் 
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய்
! 
...............கா.ந.கல்யாணசுந்தரம்

 
