நூலகம் என்றோர் இடமுண்டு
நல்லோர் நூல்கள் பலவுண்டு
படித்தால் வாழ்வில் பலனுண்டு
பார்வைக்கும் சிறந்த நலனுண்டு
புரட்டிப் பார்க்க வரவேண்டாம்
படித்துப் பார்க்க வருவோமே
பேசி இடையூரைத் தரவேண்டாம்
வாசிப்பை நேசிக்க வருவோமே
கதைகள் கவிதைகள் கட்டுரைகள்
விதையாய் மனத்தில் ஊன்றிடுவோம்
வார்த்தைச் சுரங்கம் அகழ்ந்தாய்ந்து
பேசிடும் போதில் விருந்தளிப்போம்
பண்புடையாளர் தொடர்பினைப்போல்
புத்தகம் வாசித்தல் தந்திடுமே
நற்பல நூல்கள் அணியணியாய்
நம்முடன் இணைந்தே வந்திடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக