மனிதவளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதவளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஜூலை 04, 2015
செவ்வாய், செப்டம்பர் 23, 2014
கார்கால ஹைக்கூ கவிதைகள்.....
*கார்கால மழை
நனையாமல் நகரும் நத்தைகள்
சாலையோர நாய்க்குடை காளான்கள் ...!
* பாசிபடிந்த ஆல விழுதுகள்
ஊஞ்சலாடுகின்றன...
மழையில் நனைந்த மந்திகள் !
* மந்தையில் இருந்து பிரிந்தது
ஆட்டுக்குட்டி....
மஞ்சள் வெயிலில் நனைந்தபடி !
* குளிர் காற்றில் ஊசலாடும்
தூக்கனான் குருவிக் கூடுகள்...
உறக்கமிழந்த குஞ்சுகளோடு !
* புது வெள்ளத்தில்
ஆனந்தக் கூத்தாடியது...
ஓடைக்கரை தவளைகள் !
* நேற்று பெய்த மழை வாசம்
புத்துயிர் பெற்றன...
எனது கவிதைக் கரங்கள் !
* இன்னமும் தேடுகிறது மனது
மழை வருமுன் மணக்கின்ற
மண்வாசம் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
செவ்வாய், ஜனவரி 08, 2013
நம்பிக்கையெனும் நங்கூரம் !
*இருகரம் இணைந்த மணவாழ்வில்
புதைந்துகிடக்கிறது ....
நம்பிக்கையெனும் நங்கூரம் !
*கைகளுக்குள் கனிவாய்
மலர்ந்திடுதே....
காதல் பூக்கள் !
* கைகுலுக்காமலே
நடந்து முடிந்தது...
சாதி ஒழிப்பு மாநாடு!
* கண்ணாமூச்சி வேண்டாம்
உன் கைகளை நீட்டு...கண்ணே
மருதாணி வைக்க வேண்டும் !
* கடவுளைத் தொழும் கைகள்
காத்திருக்கவேண்டும் எப்போதும்....
மற்றவர் துயர் துடைக்க !
......கா.ந.கல்யாணசுந்தரம்.
.
புதன், டிசம்பர் 05, 2012
சிக்குண்டு தவிக்கிறது....
*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !
*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !
*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!
*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!
*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012
எது சுதந்திரம்?

அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!
.....கா.ந..கல்யாணசுந்தரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


