கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....

08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.
மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.
வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
என்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.
...........கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: Dharmambal Rathinam, smiling, standing and outdoor
Image may contain: one or more people and outdoorImage may contain: 2 people, including கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், people standing, sky and outdoor