தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !
........கா .ந .கல்யாணசுந்தரம்.