![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTTsbMWsc2GWzUgRYnkR2ZGVIM_zv7MYl3-9jIJcfZGDDr4hzI-JaxaquVD5pYUpX-VK59KrFz4PvAft8dMLZ5T7XL7I-ucl_y_dcmTjVbEzsE2aLgF1K90SYNI1CJttZxEfxEr5i63wQ9/s320/humanity+symbol.jpg)
எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
மனிதனே..
பதிலளிநீக்குவாழ்வின் நயம் பார்ப்பதை விடுத்து
மனித நேயம் வளர்த்துவிடு என
சொல்லும் வரிகள்
அருமை.
http://ilavenirkaalam.blogspot.com/