
இசை அறியா உள்ளத்தையும்
செயலிழக்கச் செய்கிறது...
கொலுசுச் சத்தம்!
காய்க்க முடியாது தவிக்கும்
காகிதப் பூக்களாய்...
விலை மகளிர்!
என்றும் பசுமையாய்
நினைவில் நிற்கிறது...
பாடசாலை அனுபவங்கள்!
இனியவை பேசி
இன்னல் அகற்றுதல்...
மனிதநேயத்தின் அஸ்திவாரம்!
புரட்டிப் பார்ப்பதைவிட
என்னை படித்துப்பாருங்கள்...
ஏங்கிடும் புத்தகங்கள்!
............கா.ந.கல்யாணசுந்தரம்.