கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜூலை 13, 2018

தன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...

செறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. " தன் முனைக் கவிதைகள் " ! தெலுங்கில்" நானிலு " எனும் பெயரில் பரவலாய் வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றுள்ள நாலடிக் கவிதை வடிவம் தமிழுக்கேற்ற சிறு மாற்றங்களுடன் தமிழில் " தன் முனைக் கவிதைகள் " 
எனும் தலைப்புடன் உதயமாகி....அதன் செழுமையான விளைச்சல் தான் " நான் நீ இந்த உலகம் " எனும் நூல்!. நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும்.! நூல் அமோக வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..

என் அணிந்துரை -----------------.
ஓவியா பதிப்பகம் வெளியீட்டில்,
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுத்த
31 கவிஞர்களின் 465 கவிதைகள் இடம்பெற்ற
தமிழின் முதல் (நானிலு) தன்முனைக் கவிதைத் தொகுப்பான
"நான்..நீ..இந்த உலகம்" தொகுப்பில்...
ஹைதராபாத்தில் வசிக்கும்
மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான
சாந்தாதத் அவர்களின் அணிந்துரையில்...
‘நானிலு’ குறித்த இந்த என் ‘மகாகவி’ கட்டுரை வாசித்த ஏராளமான வாசகர்களை.. குறிப்பாகக் கவிஞர்களை இவ் வடிவம் வெகுவாய் ஈர்க்க.. விளைவாய் அவர்களுக்குள் ஒரு உத்வேகம்..
தமிழில் சுயமாய் எழுத வேண்டுமென.. நம் பெரும் கவிஞர் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் உட்பட! உடன் அவர் சில நானிலு வகைக் கவிதைகள் முகநூலில் எழுதி என் கருத்து கேட்டார். தொடர்ந்து மளமளவெனக் கவிதைகள்.. குவிய.. முகநூல் அவற்றுக்கான அரங்கேற்ற மேடையானது.
இந்த ஆரவார வரவேற்பு கண்டு ஏற்கெனவே வெகுவாய் ஈர்க்கப் பட்டிருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நானிலு உருவாக்கத்தை யொட்டி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் பெயரில் ஒரு புது வடிவம் கொண்டு வர ஆர்வம் கொண்டு... இம் முனைப்பும் வெற்றிச் சிகரம் தொட்டது முகநூல் ஆர்வலர்கள் அறிந்த செய்தி! அடுத்து தன்முனைக் கவிதைகள் எனும் அடையாளத்துடன் அவர் அஸ்திவாரம் அமைத்த புதுக் கூட்டில் வேடந்தாங்கல் போல் ஏராளமான பறவைகள். வந்து குவிந்தன.. என்ன.. வேடந்தாங்கல் பறவைகள் அப் பருவம் முடிந்ததும் மாயமாகி விடும். இந்தத் தன் முனைக் கவிதைக் கூட்டில் நாளுக்கு நாள் கவிதை வரவு அதிகரித்தபடியே... தம் இருப்பை நிலைப்படுத்தியபடியே..!
தமிழுக்கு புது வரவான இத் தளத்தின் கோலாகலம் விளைவித்த அதீத ஊக்கத்தின் முதல் ஆக்கபூர்வ விதை.. ஒரு தொகுப்பாகவே கொண்டு வந்தால் என்ன.. எனும் யோசனை. திரு. கல்யாண சுந்தரம் மற்றும் நண்பர்கள் சிந்தையில் விதைக்கப்பட... சிறந்த இலக்கியவாதியும், படைப்பாளருமான திரு. வதிலைபிரபா அவர்கள் பதிப்புலகில் தனி முத்திரை பதித்துள்ள தன் ஓவியா பதிப்பகம் மூலம் அத் தொகுப்பைக் கொண்டு வர முனைப்பு காட்டிய பேரார்வம்... திரு. கல்யாணசுந்தரம்... என் அன்புத் தோழி சாரதா கண்ணன், தோழர் அனுராஜ் ஆகியோர் உழைப்பு உற்சாகம் உந்து சக்தியின் அறுவடையின் விளைச்சல் தான் அவ் விதையின் கனி இதோ இன்று நம் கரங்களில்.. “நான் நீ.. இந்த உலகம்.”
31 கவிஞர்கள்... பல நூறு கவிதைகள்...! படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்..! கடுகில் காரம் என்பது போல் இச் சிறு வடிவத்துள் பெரும் தாக்கங்கள் அதிர்வலைகளாய் படர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புது உணர்வை, உலகைச் சுட்டுகின்றன.
‘நானிலு’ கவிதை வடிவம் தமிழில் இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றது மட்டுமன்றி அதன் தாக்கமாய் தமிழிலும் ‘தன்முனைக் கவிதைகள்’ எனும் தளம் ஜனனம் கண்டது உவகைக்குரிய விஷயம் தானே..! ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு...! அதற்கான முயற்சியின் முதல் படியான “ நான் நீ இந்த உலகம்..” எனும் இந் நூல்.."
- சாந்தாதத், ஹைதராபாத்




நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...



01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.