![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZVXvOYRe859zAflruNbT9ySbrBPp35-ldNb3j93fEqUgu19AB7ne4srwKc959y1nsynMkvzprKVPmmsRUdm-m5MPMAJ3-jxDxHVemTzV4IWdM8OB1fC5Ym8QVLu6IJOEsCPwydDORbrAs/s320/pillaiyar+thevanur.jpg)
புதன், செப்டம்பர் 19, 2012
திங்கள், செப்டம்பர் 17, 2012
மலர்களின் சிரிபொலி !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0cRLEeuvMiTjmleUa_JJghOHexlqWqsQkEvXzN4mkPWWnnXlcgKA5NJK-kAZZyW5prMoYqIYd22a-Lrc9JtzRtdOhskuM5UCGizRrVBcTY4BRBlqPlerJ9lwxaBxg19OmzIODNbrvaiZG/s320/sunset+pictures.jpg)
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !
ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !
உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !
ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !
ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !
உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !
ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
திங்கள், செப்டம்பர் 10, 2012
சனி, செப்டம்பர் 08, 2012
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MHTgbQY8MtL4-PwRMc6BdGzggj01KZzng875NZ6CirVs_o02qbcbPP2GnavcHkGO1Yg9NVm8KXYfhKWLdaHQcVPpfys1GbvCiU-xXEpol4Ol8U_uRstQGNWfSGQE0ShPsqpfXOULmVyI/s320/praneetha+1.jpg)
மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!
..................கா.ந.கல்யாணசுந்தரம்.
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhybwEa-QF2OH5intIG5fA3epnGcet7IpRGjxFds8yB_2d11rjVaIpv3ZaMViSTr64YPdGRJdH4wmKxD8-U9VzY0DxvoMhK2S1YnFvMXFsKpAFjSkT0X-orAM6wf4vAQVxkIrUabSx5Xcvd/s320/Balaji01.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivl5h9a8KlsBOth1WQ2tVw7aKi4w2lTQJlZfIM6HPCI3OvvON0vrS50p9qs3HRyiogqRNfH0JQAr6SJALMVU77m3_UF7JnZMlSZGB7QzAnb2_LS7C7VKVuJ2bLDP6BYfjegZFQuPLqjkPB/s320/balaji+sripaatham.jpg)
அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !
ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்
அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
வியாழன், செப்டம்பர் 06, 2012
அன்னை ஓர் ஆலயம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)