கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், அக்டோபர் 17, 2019

வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

ஆண்டுகள் பலவானாலும்
கண்ணதாசனே உன்னை மறப்பார்
இம்மண்ணில் யாருளர் ?
மாண்ட என் அன்னை மீண்டும் வரின்
ஒரு வரம் கேட்பேன் ....
தாய்ப்பாலோடு கண்ணதாசன்
வரிகளை எனக்குப் பிசைந்து
ஊட்டவேண்டுமென்று !
உனது நினைவு நாளில் எனது
எண்ணம் முழுதுமுன் வண்ண வரிகள் !
சற்று நினைவுகூருகிறேன்......
வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

..............கா.ந.கல்யாணசுந்தரம்

" பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்களைப்போல் )"

" தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்
(ஒருவன் மனது ஒன்பதடா)"

" பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
(மனிதன் மாறிவிட்டான்)"

" ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்கமா )"

" தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)"

" கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! - என்றும் நீயே கதி! (கல்லெல்லாம் )"

" பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)"

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை(ஒரு கோப்பையிலே ) "

........கண்ணதாசன்

tag

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்