*ஒரு இரவின் கைப்பிடிக்குள்
தப்பிக்கவே பதுங்கியிருந்தது
பகலின் ஒளிப்பிம்பங்கள்
*கரைகளை அணைத்தபடி
நதி ஓடிக்கொண்டிருந்தது
இது கரைகளின் கனவு
*கல்லுக்குள் ஈரம் இருப்பதால்
சிற்பியின் உளி விளைவிக்கிறது
எழில்மிகு சிற்பங்கள்
*இருந்தும் இறந்தபடி
வாழ்கிறார்கள்
செலவிடாத செல்வத்துடன்
*பாசத்தின் நிழலோடு
எப்போதும் பயணிக்கும்
உறவுகளின் பண்பாடு
.....கா .ந.கல்யாணசுந்தரம்