கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்!

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.





சிதம்பரம் கனகசபை : (பொற்சபை)
























திருவாலங்காடு இரத்தின சபை :
















மதுரை வெள்ளியம்பலம் :













திருநெல்வேலி தாமிர சபை:















திருக்குற்றாலம் சித்திர சபை:













எல்லா வளமும் அருளும் பெற்று அனைவரும் வாழ்க வளமுடன் என்று இறைவனை துதிக்கிறேன்!




அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.