![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MHTgbQY8MtL4-PwRMc6BdGzggj01KZzng875NZ6CirVs_o02qbcbPP2GnavcHkGO1Yg9NVm8KXYfhKWLdaHQcVPpfys1GbvCiU-xXEpol4Ol8U_uRstQGNWfSGQE0ShPsqpfXOULmVyI/s320/praneetha+1.jpg)
மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!
..................கா.ந.கல்யாணசுந்தரம்.