கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஏங்கிடும் புத்தகங்கள்!

 @ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
 படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!

@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !

@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது  ...
வசந்த காலங்களை !

@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !

@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.