கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பெத்தலகேம் நகரின் புனிதமே..!






பெத்தலகேம் நகரின் புனிதமே!
அன்னை மரியாளின் அவதார புதல்வனே!
ஆண்டவனின் தூதனே....
கல்வாரிகுன்றின் முள் முடியரசனே!
அன்பும் கருணையும் ஈகையும்
உந்தன் பிரவிக்குணங்கள்!
உலகத்தின் பிறப்புகள் உந்தன்
வருகையால் புனிதம் பெற்றன!
வேதம் பைபிளில் சங்கீதமானது!
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டு என
மனிதநேயம் கற்பித்த மகாத்மாவே!
அடைக்கலமே உனது அபயகரம்!
உனது பிறந்தநாள் உலகில்
எல்லோர்க்கும் ஒரு புனிதநாள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.