கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

காலநதியில் ஆசைப்படகுகள்...........



கண்மூடி தியானிக்கும்
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி
மௌனம்தான் !

இழையோடிய புன்னகை
எதிர்வரும் இன்னல்களை
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள்
வளமானவாழ்வின்
நாற்றங்கால்கள் !

ஓசையின்றி ஓடும்
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க...
ஐம்புலன்களையும்
அடக்கி ஆளா மானுடம்  
தினம் தினம் இழக்கிறது
‘சும்மா’..... இருக்கும் 
சுகம்தனை அறியாமல் !  

 ..............கா.ந.கல்யாணசுந்தரம்.