கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, நவம்பர் 01, 2014

அன்பெனும் சிறைக்குள்....





நினைப்பதை அப்படியே 
சொல்ல முடியவில்லை ...
சொல்வதற்கு முன் 
யோசிப்பது  முக்கியம் என்று 
யாரோ சொல்லி வைத்தார்கள் !
சிந்தனைகள் நமக்கு 
சொந்தமானவைதான்....!
ஆனால் வார்த்தைகள் மட்டும் 
நமது கட்டுப்பாட்டில் 
இருப்பதில்லை ....!
விடுதலையாகும் சிந்தனைகள் 
மற்றவர்களை சிக்க வைக்கட்டும் .... 
நம் அன்பெனும் சிறைக்குள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.