கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்

கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் தமது ஆண்டுவிழாவில் வெளியிட்ட ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு நூலான " செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி " நூலுக்கான அணிந்துரை ...Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், textImage may contain: textImage may contain: textImage may contain: textNo photo description available.Image may contain: text

திங்கள், ஏப்ரல் 06, 2020

வேளாண் அறிவியலின் மதிப்புறு முனைவர் நம்மாழ்வார்

அறிவியல் வேளாண்மையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வாழ்ந்த நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
போற்றுவோம் அவரை.
......கா.ந.கல்யாணசுந்தரம்

  • மரபுவழி விதையுலகை
அடையாளப் படுத்தியவர்
உழவின் ஆசான் நம்மாழ்வார்

  • இயற்கை விவசாயம்
இவரது மூச்சு
நம்மாழ்வார்

  • பன்னாட்டு வேளான்மைப்
புரட்சிக்கு வித்திட்டவர்
நம்மாழ்வார்

  • இயற்கை உழவாண்மை
பேரிகையின் ஆசிரியர்
நம்மாழ்வார்

  • வேளாண் துறையில்
மரபணு சோதனையை எதிர்த்தவர்
நம்மாழ்வார்

  • வேளாண் அறிவியலின்
மதிப்புறு முனைவர்
நம்மாழ்வார்

  • தமிழின வாழ்வியல்
பல்கலைக்கழகமாய் நடமாடியவர்
நம்மாழ்வார்


......கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: one or more people, people standing, beard and outdoor

வியாழன், ஏப்ரல் 02, 2020

கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் விமர்சனம்...வெளிச்ச மொழியின் வாசிப்பு

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நாடறிந்த கவிஞர்.!
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரது புதுக்கவிதைப் புதையலொன்றைச் சமீபத்தில்தான் எனக்களித்தார்.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
"வெளிச்சமொழியின் வாசிப்பு "
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
இந்நூல்
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
கிராமியத்தின் விழுமியங்களை விரித்துவைக்கிறது.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
*
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
"மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
*
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
*
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
*
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
*
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
இந்தக் முகவரி நம்மை நெடுநேரம் நிற்கவைத்துவிடுகிறது.
*
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
*
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
*
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

No photo description available.

Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், beard

144...

144....
+++++++++++++++++++++++
* உதிர்ந்த சருகு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
* வாலாட்டியபடி
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
* தார்ச்சாலைகள் முழுக்க
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
* சாலையோரம் ஓய்வில்
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
* யாரும் வரவில்லை
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
* பீதியில் வெளுத்த முகம்
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
............கா.ந.கல்யாணசுந்தரம்

Image may contain: outdoor

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?

காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

Image may contain: 1 person