கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஏப்ரல் 02, 2020

144...

144....
+++++++++++++++++++++++
* உதிர்ந்த சருகு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
* வாலாட்டியபடி
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
* தார்ச்சாலைகள் முழுக்க
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
* சாலையோரம் ஓய்வில்
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
* யாரும் வரவில்லை
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
* பீதியில் வெளுத்த முகம்
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
............கா.ந.கல்யாணசுந்தரம்

Image may contain: outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக