கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஏப்ரல் 02, 2020

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?

காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

Image may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக