
@வானத்து மழைத்துளிகளின்
வண்ணப் பதிப்பு....
வானவில் !
@புதியவர்களின் வருகைக்காக
மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...
ஒரு இலையுதிர்காலத்து இலை !
@மழைச் சாரல்களில்
ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....
விளையாடும் சிறுவர்களின் கண்களில்!
@இறை தேட வழியில்லை
சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...
மழையில் நனைந்த புறாக்கள்!
@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்
மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....
மின்னல் வகிடுகள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.