கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், டிசம்பர் 12, 2011

தாய்மை




















பல்லவி

ஒளிரும் மெழுகிலே
ஓவியம் பிறந்தால்
தியாகம் என்றே சொல்லாகும்!

வணங்கும் தெய்வமும்
வாழ்த்திப் பேசிடும்
தாய்மையின் அழகு தெய்வீகம் - இந்த
தாய்மையின் அழகு தெய்வீகம்!
....ஒளிரும்

சரணம்

மாதங்கள் பத்தும்
சுகமாய் சுமக்க
சுமந்த உயிரே தாயாகும்!

பாச நெஞ்சம்
முதுமையில் வீழ்ந்தால்
பிள்ளையின் கரமே தூணாகும் - இந்த
பிள்ளையின் கரமே தூணாகும்!

....ஒளிரும்

கருவில் தோன்றிய
நாள் முதலே - உன்
உருவம் காணத் துடித்திருந்தேன்!
கடலும் அலையும் விலகினாலும்
அன்னையை பிரியா நிலை வேண்டும் - என்
அன்னையைப் பிரியா நிலை வேண்டும்!

.....ஒளிரும்

.............கா.ந.கல்யாணசுந்தரம்.