கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 19, 2022

துளிர்த்தலின் காலத்தினை எதிர்நோக்கி!


உதிர்க்கும் முன்
வண்ணங்களைப்
போர்த்திக் கொள்கின்றன...
நிறம் மாறாத பூக்கள் இருக்க
நிறம் மாறும் இலைகள்!
வெண்பனி கொட்டும்முன்
எங்களுக்கு
வண்ணமிகு காட்சி தந்து
மகிழ்வளிக்கும் மரங்கள்!
இலையுதிர்காலம்
இனிதாய் வரவேற்கிறோம்
துளிர்த்தலின் காலத்தினை
எதிர்நோக்கி!

...... கா. ந. கல்யாணசுந்தரம்.