![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKn8bdqXkdvCShdxNuOduBpyst0yn_S9464fQozAVCpfQ6YIcGk6fnG_Y5ayMQs7ZBXIupg4GdgfM0PL8fWVKDO3hmXV4yDxKGoz0WtZYiinaG0DpgH3J92lJT_fkVYq2rQL8ksd7tD5pf/s320/shadowss.jpg)
*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !
*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!
*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !
* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !
* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !
..............கா.ந.கல்யாணசுந்தரம்.