கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜூன் 21, 2016

தமிழினத்தின் பெருமைதனை

தமிழின் தொன்மையும்
வரலாறும்
கல்வெட்டு சாசனங்கள் !
கலாச்சாரத்தின் படிமங்களாய்
காலத்தால் அழியா
கற்சிலைகள் !

கலைவளர்த்த மன்னர்களின்
கடமையில் விளைந்தன
எழில்மிகு சிற்பங்கள் !
செம்மொழி தமிழென்றும்
மூத்தகுடி தமிழனென்றும்
சொல்லுவது எப்படி ?
தொல்பொருள் ஆய்வுகளால்
துலங்கும் கோயில்
கற்சிலைகள் !

சிலைகடத்தி பிழைத்தல்
தொழில் செய்து
பொருளீட்டும் மூடர் கூட்டம்
தமிழர்தம் தொன்மையை
சிதைக்கும் சீர்கேட்டில்
உலவுகின்றார் !
தமிழினத்து துரோகிகளை
வேரோடு அழித்தொழித்து
சமுதாய நலம்காக்க
அரசியலார் கடும் சட்டம்
தீட்ட வேண்டும் !
தமிழினத்தின் பெருமைதனை
காக்க வேண்டும் !

 ......கா.ந.கல்யாணசுந்தரம்.