கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஜூன் 08, 2015

எனது எண்ண ஓட்டங்களாக பகிரப்பட்டவை......



தலைப்பைச் சேருங்கள்











படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...
நிழல்தரும் மரங்கள் !

வற்றிய குளத்தை
முத்தமிட வா....
கோடை மழையே !

தோகை விரித்த மயிலுக்கு
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !

தென்றலுடன் கைகோர்த்து
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !

புதியதாய் துளிர்த்தலில்
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.