கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஜனவரி 26, 2026

முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.

 

முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.

சென்னை பாட்டாபிராமில் நடைபெற்ற தன்முனை படைப்பாளர் பேரவை ஆண்டுவிழாவில் எமக்கு யுகநாயகர் எனும் விருதினை அளித்துப் பாராட்டினார்கள் . முன்னதாக தலைமை வகித்துப் பேசிய சொல்லின் செல்வர் திரு . ஆவடிக்குமார் தன்முனைக் கவிதைகள் அனைவராலும் எழுதப்படுகின்ற ஆகச்சிறந்த கவிதைவடிவமாக உள்ளது என்றும் கவிஞர்களின் எழுத்துகள் இந்தச் சமூகத்தின் மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்கின்றன எனவும் பேசினார் . விழாவில் எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் பெயரில் நூலகம் ஒன்றினைத் திறந்து வைத்தார் . தன்முனைக் குழும செயல்தலைவர் ந . வேலாயுதம் அவர்கள் வாழும் வரலாறு கவிச்சுடர் கா . ந . கல்யாணசுந்தரம் என்கிற தலைப்பில் சிறப்பாகப் பேசினார் . விழாவில் முன்னிலை வகித்த ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் மற்றும் நூலகர் சுரேஷ் பாபு ஆகியோர் கரங்களால் எமக்கு யுகநாயகர் விருது அளிக்கப்பட்டது . மேடையில் படைப்பாளர் பேரவைத் தலைவர் சுப்புராஜூ, நிறுவுநர் அன்புச்செல்வி சுப்புராஜூ , தன்முனைக் குழும செயல் தலைவர் ந . வேலாயுதம் , முனைவர் வே . புகழேந்தி , வைரவரி வானரசன் , எழில் இலக்கியப்பேரவை எழில் சோம பொன்னுசாமி , கவிஞர் ஆரோக்கியதாஸ் , நூலேணி பதிப்பகம் கன்னிக்கோவில் இராஜா , திரு . செ . முனுசாமி , கவிஞர் நாதமணி, கவிஞர் ஜார்ஜ் மரியண்ணன் ஆகியோர் . இளம் தன்முனைக் கவிகள் 10 பேருக்கு எமது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன . 10 நூல்கள் வெளியிடப்பட்டன . விழாவில் கவிஞர்கள் ராஜூ ஆரோக்கியசாமி , தன்முனைக் குழும நிர்வாகிகள் புதுகை ஆதீரா, முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி , தமிழ்திரு ஆ . சண்முகம் , கவிதைச்சாரல் சங்கமம் தலைவர் இரா . பேச்சியம்மாள் , கவிஞர் விஜயகல்யாணி , கவிஞர் வீரா , கவிஞர் அகவலன் , தமிழ்த்திரு பன்னிரு கை செல்வன் , கவிஞர்கள் ஆ . ஜனனி , கவிதாகுமாரி , லாவண்யா மணிமுத்து , ஏ . வள்ளி , லட்சுமி செந்தில் மற்றும் தமிழ் ஆளுமைகள் , கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர் .

தன்முனைக் கவிதைகளின் வளர்ச்சிக்கு பலவகையில் நற்பணி செய்துவரும் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ குடும்பத்தினருக்கு தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் இனிய வாழ்த்துகள் .
......கா . ந . கல்யாணசுந்தரம் .