கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, மே 13, 2017

வைகையாற்று நாகரீகம் !




வைகையாற்று நாகரீகம் !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்தியாவின் தொன்மையைப் புரட்டிப்போட்டது
தமிழனின் வைகை ஆற்று நாகரீகம் !
ஆம்....கீழடி அகழ்வாராய்ச்சி
ஐந்தாயிரத்து எட்டுநூறு பாரம்பரிய கலாச்சார
பொருட்களின் கண்டுபிடிப்பு !
சங்ககாலத்து பரிபாடல் மதுரைக்காஞ்சியின்
தொன்மைப் பொருட்களின் களஞ்சியம் !
பட்டினப்பாலையில் உலாவரும் உறைகேணிகளும்
இருந்திட்ட தடயங்களின் இருப்பிடங்கள் !
தமிழ்ப் பிராமி எழுத்துகளால் ஆன மண் ஓடுகள்...
சிந்துசமவெளி ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான
தொல்லியல் நாகரீகமாய் விரிகிறது தமிழனின்
மண் சார்ந்த உயரிய நாகரீகம் !

பாதியிலே மத்திய அரசு நிறுத்தியதன் விளைவில்
முடங்கிப்போனது தமிழனின் தொல்லியல் வரலாறு !
மதம் சாரா தமிழனின் வாழ்வு முறை
முத்தாய்ப்பாய் விளங்குவதால் மதவாத அரசியல்தான்
முட்டுக்கட்டைப் போட்டதோ ?
நெஞ்சுரமில்லா தமிழக அரசியலார் இருப்பிடத்தில்
தொல்லியலார் அமர்நாத்தின் பணியிடை மாற்றம்
நிகழ்ந்ததில் வியப்பென்ன ?
பழந்தமிழர் வரலாற்று இலக்கிய வாழ்வு
கிமு இரண்டாம் நூற்றாண்டை முந்தியது என
வைகை நதி நாகரீகம் இயம்புகிறது !
அகழ்வாராய்ச்சி அரை குறையாய் நின்றாலும்
மூடி மறைக்க முடியாது தமிழர்தம் தொன்மையை !


............கா.ந.கல்யாணசுந்தரம்