கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 12, 2016

" கா " விரித்த நீர் இப்போது.........






வங்கிகளை
நாட்டுடமையாக்கியதுபோல்
தேசியமயமாகட்டும்
இந்திய நதிகளும் அணைகளும் !
அரசியல் செய்வோர் அதிகாரமின்றி
தேசிய நதித்துறை
நடுநிலையோடு இயங்கட்டும் !
இந்திய மண்ணின் விளைபொருட்கள்
உலக மாந்தர் நல்வாழ்வின்
உணவுப் பொருட்கள் எனவறிந்து
நீரின்றி அமையாது உலகென்று
உணரும் நாள் எந்நாளோ ?
அணை தேக்கிய நீர்....
நதிநீர் வழிகளுக்கே
சொந்தமென அறிந்திடுவீர் !
" கா " விரித்த நீர் இப்போது
ஆற்றுக்குள் இல்லை....
அது கர்நாடகம் செல்ல
ஓர் மணல் வழிப் பாதையானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்